Thursday, August 6, 2009

கேட்டதில் பிடித்தது 1

உறங்கிடும் போதும் விழித்திடும் போதும்
உன் முகம் எதிரில் இருந்தால் போதும்..

உயிர் விடும் போதும்
உன் குரல் கேட்டால்
மரணம் முக்தி பெறும்..

----------------------------------------------
சிரித்திடும் போதும் அழுதிடும் போதும்
உன் விரல் பிடித்து நடந்தால் போதும்

யார் நம்மை எதிர்த்தாலும்
வாழ தோன்றிடும்..

----------------------------------------------
உன்னில் துவங்கி என்னில் முடியும்
மெல்லிய உணர்வுகள் கொடுத்தாய் நீயும்..


தந்தையும் தாயும் சேர்த்து செய்த
தோழன் நீதானே..

----------------------------------------------

Tuesday, April 28, 2009

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது..

அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ - குழந்தை.
என் காதல் – முத்தம்.

----------------------------------------------------
நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!

----------------------------------------------------
“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
இவளை விட்டு எப்படிப் பிரிய?

----------------------------------------------------
உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!

----------------------------------------------------
நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!

----------------------------------------------------

-- அருட்பெருங்கோ..

Tuesday, April 14, 2009

கொஞ்சம் கிறுக்கல் 8


தென்றலாய் வருடிச் செல்கிறாய்..
தொடு வானமாய் தொலைவினில் நிற்கிறாய்..
உன் நினைவுகளோடு போராடி உறங்காது,
அந்தி வானமாய் விழி சிவக்க வைக்கிறாய்..
வசந்த காலமோ.. இலையுதிர் காலமோ..
நீ விட்டு செல்லும் தடங்கள்..
அதை தொடர்ந்து..
நான்..

----------------------------------------------

Sunday, March 15, 2009

கொஞ்சம் கிறுக்கல் 7


நான் மனதில் நினைத்து
உன்னிடம் சொல்ல வருவதை,
சொல்லும் முன்பே கண்டு பிடிக்கிறாயே..
கணிப்பொறி அறிவியல் மாணவி,
உனக்கு யார் "உளவியல்" கற்று தந்தது??

----------------------------------------------
"என்னை பற்றி என்ன தெரியும்?" என்ற
உனது கேள்விக்கு எனது பதில்
"எதுவும் தெரியாது. உன்னைத் தவிர..
அதனால் என்ன? உன்னையும் என்னையும்
ஒரு புள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த
கடவுளுக்குத்தான் எல்லாமே தெரியுமே!!"

Saturday, March 14, 2009

கொஞ்சம் கிறுக்கல் 6

ஆயிரம் பெங்குவின்களின் நடுவில்
தன் தாய் பெங்குவினை மட்டும்
சரியாக கண்டுபிடிக்குமாம்,
குட்டி பெங்குவின்..
லட்சம் பெண்களுக்கு நடுவே
என் கண்கள் உன்னை மட்டும்
அழகாக கண்டுபிடிக்கிறதே..
யாரடி நீ மோகினி?

----------------------------------------------
தெளிந்த நீரை, பால் போல
மாற்றுமாம் 'கார்பன்-டை-ஆக்சைடு'..
கள்(ள) மனதையும் பசும்பால் போல
தூயதாக மாற்றும் புதிய வகை
'ஆக்சிஜன்' நீ தானடி..

----------------------------------------------
புயல் வீசினாலும்
அமைதி காக்கும்
சிறு குளமாய் இருந்தவன்,
அனுதினம் ஆர்ப்பரிக்கும்
அலை கடலாய் இன்று
உன் நினைவை சுமந்து..

----------------------------------------------
சாதாரணமாக நீ பேசும் போது கூறிய
எதோ அர்த்தம் புரியாத வரிகள் சில
வானவில்லாய் வந்து வட்டமிடும் போது
அதன் பொருள் அறிய விழைகிறேன்..

----------------------------------------------

Thursday, March 5, 2009

ஒரு தேவதைக்குதான்..

Devathai [Thanks to Kagaya]
இன்று உலக மகளிர் தினமாம்..
எப்படி உன்னை வாழ்த்துவது..
"தேவதைகள் தினம்" என்றைக்கு என்று
தேடிக் கொண்டு இருக்கின்றேன்..
தெரிந்தால் நிச்சயம் நேரில் வந்து
வாழ்த்தி செல்வேன்..


இந்த கவிதையை படித்து,
நீ நல்லா இருக்கு என்றதும்
என்னை விட உயரமாய்
துள்ளி குதிக்கிறது
குட்டி கவிதை..

Wednesday, March 4, 2009

கொஞ்சம் கிறுக்கல் 5

"செல்ல கோபம்" என்றால் என்ன என்று
நீ கேட்டதற்கு "தெரியாது" என்று
பதில் உரைத்தேன்..
கோபப்பட்டு முறைக்கிறாய் நீ..
அப்போதுதான் தெரிந்தது
"செல்ல கோபம்" என்பது
தேவதைகளின் மொழி என்று..

----------------------------------------------
அந்தி வானம் சிவக்கும் போதெல்லாம்
வெட்கப்படும் நொடிகளில் சிவக்கும்
உன் குட்டி கன்னங்களை விட
அதிகமாக சிவக்குமா என்று
சில முறை பார்ப்பதுண்டு..
பாவம் அந்த வானம்.
ஒவ்வொரு முறையும் தோற்றே போகிறது..

----------------------------------------------
மலர்ந்து வாடும் மலரும் இல்லை..
மலர் தேடும் வண்டும் இல்லை..
தூண்டிலில் சிக்கும் மீனும் இல்லை..
தொலைவில் ஒளிரும் நட்சத்திரமும் இல்லை..
எப்போதும் குறும்பு மின்னும்
உன் கண்களை எதனோடு ஒப்பிடுவது?

----------------------------------------------
"முதிய பருவத்தில் மனிதன்,
மீண்டும் குழந்தையாக மாறுவான்"
யாரோ சற்று தவறாக சொன்னது இது..
23 வயது குழந்தை நீ,
பழிப்பு காட்டி சிரிக்கும்போது
26 வயதில் மீண்டும் நான்
குழந்தையாகி போகிறேன்..

----------------------------------------------

Monday, February 23, 2009

கொஞ்சம் கிறுக்கல் 4

உன்னை தேடும்போது
கண்களில் படாது,
எதிர்பாராத தருணங்களில்,
நீ எதிரே வரும் பொழுது
செய்வதறியாது சட்டென்று தடுமாறும்
நான்..

----------------------------------------------
தடுமாறும் சில கணங்களில்
கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
சாமர்த்தியமாக பதில் உரைத்து,
நீ கண் சிமிட்டுகையில்..
அசந்து நிற்கும்
நான்..

----------------------------------------------
கண் சிமிட்டும் நொடியில்
சின்னஞ் சிறு விழிகளில் இருந்து
பறந்து செல்லும் பத்து லட்சம்
மின்மினிகளை....
சிறு புன்னகையுடன் ரசிக்கும்
நான்..

----------------------------------------------
புன்னகை பூ அவள்..
புயலையும் பூந்தென்றலாய்
மாற்றி விடும் அசாத்தியம்..
எரிமலையையும் கலங்காது
எதிர்கொள்ளும் தீரம்..
வியந்து வியந்து விழி மூடி
போர்வையாய் நினைவுகளை போர்த்தும்
நான்..

----------------------------------------------
மூடிய விழிகளின் நடுவில்
நீக்கமற நிறைந்து இருக்கும்
நினைவுகளை,
கூட்டை சுமந்து செல்லும்
சிறு நத்தை போல சுமக்கும்
நான்....

----------------------------------------------
பனி துளிகளின் இடையே
எதையோ தேடி செல்லும்
நத்தை போல,
அனுதினம் உன்னை தேடும்
அன்றில் பறவையாய்
நான்..

----------------------------------------------
இது கிறுக்கல் அல்ல.. ஒரு இளமனதின் மெல்லிசை..

Tuesday, February 17, 2009

கொஞ்சம் கிறுக்கல் 3

பகலை விட
நிலவொளியில் தாஜ்மஹால்
மிக அழகாக தெரியுமாம்..
அந்தி சாய்ந்த ஒரு பொழுதில்,
அலைபேசி திரைஒளியில்,
உன் அழகுமுகம் கண்ட பிறகு
நம்பாமல் இருக்க முடியவில்லை..

----------------------------------------------
வண்ண கோல போட்டிக்கு
நீ கோலமிடுகையில்
உன்னை கண்ட பிறகு,
கோலம் மெதுவாக சொன்னது,
"இதுதான் கோலமயில் போல"
----------------------------------------------
நான் கவிதை சொல்லும்போது
கதை கேக்கும் சுட்டி சிறுமி போல
கண் சிமிட்டாது பாக்கிறாய்..
அது வரை தள்ளி நின்ற கவிதைகள்
என்னை நோக்கி ஓடி வருகின்றன..
----------------------------------------------
எல்லோரிடமும் சிறிது பேசும் நீ,
என்னை கண்டதும் மௌனமாகும்போது
கண்ணுக்கு புலப்படாத,
எதோ ஒன்று நம்மை பார்த்து,
சிரிக்க தொடங்குகிறது..
அது என்னவென்று..
உனக்கும் தெரியவில்லை..
ஏன் சிரிக்கின்றது என்று
எனக்கும் புரியவில்லை..

----------------------------------------------

Thursday, February 5, 2009

கொஞ்சம் கிறுக்கல் 2

நந்தவனத்தில் நீ
உலா வருகையில்
எங்கிருந்து வந்தது இந்த
'புதிய வகை மலர்' என்று
வண்ணத்து பூச்சிகள் குழம்பியது
பாவம் உனக்கு தெரியாது..
உன் மேல் பொறாமை கொண்ட
அந்த மலர் கூட்டத்துக்கு
நிச்சயம் தெரிந்து இருக்கும்..
----------------------------------------------
தினம் காலையில்
நீ பறிக்க காத்திருக்கும்
அந்த சிறு மஞ்சள் மலர்கள்
என்ன தவம் செய்து இருக்கும்?
----------------------------------------------
இலவம் பஞ்சு நீ..
ஆனால் உன்னை காணும்போது
பற்றிக் கொள்வதென்னவோ
என் இதயம் தான்..
----------------------------------------------
உன்னை சந்திக்கும்போது..
கவிதைகள் உதடு வரை வந்து
உன் செவி சேராமலே,
என்னை திட்டி, காற்றில் கரைவதை
அறிவாயா நீ?

----------------------------------------------
என்ன வைத்திருக்கிறாய் உன் கண்களில்..
காந்தமா? இல்லை கதிர்வீச்சா?
கவர்ந்து இழுத்து
கவிழ்த்து விடுகிறதே..
----------------------------------------------

Wednesday, January 14, 2009

படித்ததில் பிடித்தது

எங்கோ எப்போதோ படித்தது..

அழகானவை எல்லாம்
உன்னை ஞாபகப்படுத்துகின்றன..
உன்னை ஞாபகப்படுத்தும் எல்லாமே
அழகாகவே இருக்கின்றன..

----------------------------------------------------
நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!
----------------------------------------------------
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ!

----------------------------------------------------
எத்தனையோ அழகான‌
பெண்களைப் பார்த்தும்
தடுமாறாத எனக்கு...
உன்னைப்
பார்த்ததும் என்
தடுமாற்றங்களும்
அழகாக இருக்கின்றன..
என்னடி செய்தாய் என்னை ?
----------------------------------------------------
என் வீட்டு வாசலில் அஞ்சல் பெட்டி..
புதிதாக ஏதும் அஞ்சல் வந்திருகின்றதா
என்று எட்டி பார்த்தேன்..
அசைவற்று கிடந்தது ஒரு சிறிய இறகு..
எந்தப் பறவை எழுதிச் சென்று இருக்கும்?
----------------------------------------------------
விளையாட ஆள் இல்லை..
சோகத்தில் பொம்மைகள்..
பள்ளியில் குழந்தை..
----------------------------------------------------
கோடை விடுமுறை..
மகிழ்ச்சியில் குழந்தைகள்..
கவலையில் பள்ளி காக்கைகள்..

Monday, January 12, 2009

கொஞ்சம் கிறுக்கல்

நான் உன்னை..
நினைத்து பார்க்கவும் நினைக்கவில்லை..
மறக்கவும் நினைக்கவில்லை..
இருப்பினும் தினம் பார்க்கும் எதோ ஒன்று
உன்னை நினைவூட்டி சென்று விடுகிறது..
அனுதினம் கரையை வருடி செல்லும்,
அலையை போல..
-------------------------------------------
கண்ணிமைக்கும் நொடியில்,
கடந்து செல்லும் அவளது
கயல்விழி கவனத்தை களவாடி செல்கிறது..
மலரில் இருந்து மதுரம் குடித்து செல்லும்
சிறிய வண்ணத்துப்பூச்சியை போல..
-------------------------------------------
பாடலில் இரு வரி திருடி விட்டதற்காக
இங்கே வழக்காடுகிறார்கள்..
என் கவிதை உணர்வையே..
களவாடி காற்றோடு கலந்து விட்டாள் அவள்..
எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது?

-------------------------------------------
காதலில் விழுந்தால் கவிதை வருமாம்..
காதலில் தோற்றால் தத்துவம்/ஞானம் வருமாம்..
நான் விழவும் இல்லை.. தோற்கவும் இல்லை..
எனக்கேன் வருகிறது??
எல்லா கேள்விக்கும், விடை இருந்தே ஆக வேண்டுமா என்ன?
(கொஞ்சம் மொக்கை-யா ட்ரை பண்ணா இப்படித்தான் சார் வருது.. :-) )