Thursday, February 5, 2009

கொஞ்சம் கிறுக்கல் 2

நந்தவனத்தில் நீ
உலா வருகையில்
எங்கிருந்து வந்தது இந்த
'புதிய வகை மலர்' என்று
வண்ணத்து பூச்சிகள் குழம்பியது
பாவம் உனக்கு தெரியாது..
உன் மேல் பொறாமை கொண்ட
அந்த மலர் கூட்டத்துக்கு
நிச்சயம் தெரிந்து இருக்கும்..
----------------------------------------------
தினம் காலையில்
நீ பறிக்க காத்திருக்கும்
அந்த சிறு மஞ்சள் மலர்கள்
என்ன தவம் செய்து இருக்கும்?
----------------------------------------------
இலவம் பஞ்சு நீ..
ஆனால் உன்னை காணும்போது
பற்றிக் கொள்வதென்னவோ
என் இதயம் தான்..
----------------------------------------------
உன்னை சந்திக்கும்போது..
கவிதைகள் உதடு வரை வந்து
உன் செவி சேராமலே,
என்னை திட்டி, காற்றில் கரைவதை
அறிவாயா நீ?

----------------------------------------------
என்ன வைத்திருக்கிறாய் உன் கண்களில்..
காந்தமா? இல்லை கதிர்வீச்சா?
கவர்ந்து இழுத்து
கவிழ்த்து விடுகிறதே..
----------------------------------------------

1 comment:

  1. இலவம் பஞ்சு நீ..
    ஆனால் உன்னை காணும்போது
    பற்றிக் கொள்வதென்னவோ
    என் இதயம் தான்..
    ----------------------------------------------
    உன்னை சந்திக்கும்போது..
    கவிதைகள் உதடு வரை வந்து
    உன் செவி சேராமலே,
    என்னை திட்டி, காற்றில் கரைவதை
    அறிவாயா நீ?
    "

    Kalakkal Kavithaigal
    :)

    ReplyDelete