Tuesday, April 28, 2009

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது..

அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ - குழந்தை.
என் காதல் – முத்தம்.

----------------------------------------------------
நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!

----------------------------------------------------
“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
இவளை விட்டு எப்படிப் பிரிய?

----------------------------------------------------
உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!

----------------------------------------------------
நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!

----------------------------------------------------

-- அருட்பெருங்கோ..

1 comment:

  1. “பிரிந்து விடு! பிரிந்து விடு!”
    என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
    ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
    இவளை விட்டு எப்படிப் பிரிய?


    pidiththa varikal kavithaikal arumai..

    ReplyDelete