Wednesday, January 14, 2009

படித்ததில் பிடித்தது

எங்கோ எப்போதோ படித்தது..

அழகானவை எல்லாம்
உன்னை ஞாபகப்படுத்துகின்றன..
உன்னை ஞாபகப்படுத்தும் எல்லாமே
அழகாகவே இருக்கின்றன..

----------------------------------------------------
நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!
----------------------------------------------------
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ!

----------------------------------------------------
எத்தனையோ அழகான‌
பெண்களைப் பார்த்தும்
தடுமாறாத எனக்கு...
உன்னைப்
பார்த்ததும் என்
தடுமாற்றங்களும்
அழகாக இருக்கின்றன..
என்னடி செய்தாய் என்னை ?
----------------------------------------------------
என் வீட்டு வாசலில் அஞ்சல் பெட்டி..
புதிதாக ஏதும் அஞ்சல் வந்திருகின்றதா
என்று எட்டி பார்த்தேன்..
அசைவற்று கிடந்தது ஒரு சிறிய இறகு..
எந்தப் பறவை எழுதிச் சென்று இருக்கும்?
----------------------------------------------------
விளையாட ஆள் இல்லை..
சோகத்தில் பொம்மைகள்..
பள்ளியில் குழந்தை..
----------------------------------------------------
கோடை விடுமுறை..
மகிழ்ச்சியில் குழந்தைகள்..
கவலையில் பள்ளி காக்கைகள்..

3 comments:

  1. //கோடை விடுமுறை..
    மகிழ்ச்சியில் குழந்தைகள்..
    கவலையில் பள்ளி காக்கைகள்.. //

    Nostalgic. Superu :)

    ReplyDelete
  2. //கோடை விடுமுறை..
    மகிழ்ச்சியில் குழந்தைகள்..
    கவலையில் பள்ளி காக்கைகள்..\\

    Nice:)

    ReplyDelete
  3. எத்தனையோ அழகான‌
    பெண்களைப் பார்த்தும்
    தடுமாறாத எனக்கு...
    உன்னைப்
    பார்த்ததும் என்
    தடுமாற்றங்களும்
    அழகாக இருக்கின்றன..
    என்னடி செய்தாய் என்னை ?


    Nice :)

    ReplyDelete