skip to main |
skip to sidebar
காலை நேர கூட்ட நெரிசலில்
தோளில் மடிக்கணினி சுமந்து,
நடத்துனரிடம் ஒரு ரூபாய் சில்லறைக்கு
ஒன்பது நிமிடம் சண்டையிட்டு,
அலுப்போடு அலுவலகம் சென்று
பிடிமானம், வருமான வரி என
மாதம் ஒரு முறை சம்பள பட்டியலில்
சில ஆயிரம் ரூபாய்கள்
கேள்வி எதுவுமின்றி
வரி செலுத்தும் அவனை
பார்த்ததும் கண்டுகொண்டேன்..
இவன் என்னை போல் ஒருவன்.
அவனை அழைத்து சொல்ல வேண்டும் - "நீ என் இனமடா!"
சற்றும் சலனமில்லாத முகம்.
எங்கோ எதையோ தேடும்,
குறுகுறு கருவிழிகளில்,
இனம் புரியா ஒரு ஈர்ப்பு.
பார்வை என் மீது விழுந்ததும்,
சிலநொடி நிலை குத்தி நிற்க,
என்னவென்று வர்ணிக்க
அந்த மின்மினி குருநகையை..
மின்னல் எதுவும் தெறிக்கவில்லை..
வண்ணத்து பூச்சி எதுவும் வட்டமிடவில்லை..
சிறு மெல்லிய அதிர்வு மட்டும்.. 
இதயத்தின் மையத்தில் இதமாக..