ஒரு சில்லென்ற இளங்காலை பொழுது..
பனியில் குளித்த பச்சைப் புல்வெளி..
குடத்தில் தண்ணீர் ஊற்றும் ஒரு கற்சிலை..
அதன் ஓரமாய் வெளிர் மஞ்சள்
நிற புடவையில் அமைதியாய் அவள்..
இளம் ஆரஞ்சு வண்ண ரோஜாக்கள்
சேர்ந்த பூங்கொத்தை மறைத்து
அவள் முன்னே புன்னகையுடன் நான்..
சற்றே தலை சாய்த்து குருஞ் சிரிப்புடன்
ஆர்வத்துடன் அவள் பார்க்க..
திடீரென ஒரு குரல்..
"அம்மா.. பால்",

அடச்சே! பக்கத்துக்கு வீட்டிற்கு பால் ஊற்றும்
பையன் வழக்கம் போல இன்று
என் கனவுக்கும் பால் ஊற்றிச் சென்றான்..